ஐ.நா.விசாரணை சாட்சியங்களின் இரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அச்சமின்றி சாட்சியமளிக்க அழைப்பு !

  • October 6, 2014
  • TGTE
Ina_alippu_007ஐ.நா மனித உரிமைச்சபையினால் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையில் பங்கெடுக்கும் சாட்சியங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுமென, ஐ.நாவினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி அச்சமின்றி அனைவரும் சாட்சியம் வழங்க முன்வரலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் 30ம் திகதிக்கு முன்னராக சாட்சியங்களை வழங்கவேண்டுமென, ஐ.நாவின் விசாரணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த விசாரணை தொடர்பில் ஐ.நாவின் Terms of Reference (http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx)நெறிமுறைகோவையின் Witness protection / Confidentiality of information குறிப்புக்களில் இரசியதன்மைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமாதமின்றி சாட்சியங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான மையம் இது தொடர்பிலான விழிப்பினை ஏற்படுத்தும் பொருட்டு பன்முகத்தளங்களில் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதோடு சாட்சியங்களை இனங்கண்டு அவற்றினை உரியமுறையில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றது.இது தொடர்பிலான மேலதிக விளக்கம் :அனைத்துலக விசாரணையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் என்ன ?சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணை தொடங்கியுள்ளது. இவ்விசாரணைக்கு வலுவூட்டி சாட்சியங்களை, ஆதாரங்களை பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் வழங்குவதன் மூலம், தமிழினஅழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதோடு, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சட்ட வழிமுறைகள் ஊடாக நாம் கோருவதற்கு வாய்ப்பு எட்டியுள்ளது.

எந்த காலப்பகுதிக்குள் பாதிப்புக்குள்ளானவர்கள் சாட்சியங்களை வழங்கமுடியும் ?

21 பெப்வரி 2002ம் ஆண்டில் இருந்து 15 நொவெம்பர் 2011ம் ஆண்டுக்குள் பாதிப்புக்குள்ளானவர்களும், இந்த காலப்பகுதியோடு ஒட்டிய சம்பவங்களோடு தொடர்புடைய முந்திய அல்லது பிந்திய காலச்சம்பவங்களையும் வழங்கமுடியும்.

சாட்சியங்கள் வழங்குவோரின் இரகசியம் பாதுகாக்கப்படுமா ?

நிச்சயமாக.

சாட்சியங்கள் அளிக்கும் ஒவ்வொருவரது வாக்குமூலங்களும், அவர்களது விபரங்களும் இரகசியமாக பாதுகாக்கபடும் என்பது ஐ.நாவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாட்சியமளிப்போரின் உறவினர்கள் சிறிலங்காவில் இருப்பின் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா ?

இரகசியத்தன்மை உறுதியாக பேணப்படுவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் சிறிலங்காவுக்கோ அல்லது அதனோடு சம்பந்தபட்டவர்களுக்கேர் தகவல்கள் செல்லாதிருப்பதற்கான பொறிமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

More from our blog

See all posts