கொமன்வெல்த் போட்டியில் மகிந்த ராஜபக்ச பங்கெடுக்காமைக்கு நா.க.த.அ.இன் அழுத்தமும் ஒர் காரணம் !

  • August 1, 2014
  • TGTE
கொமன்வெல்த் போட்டியில் மகிந்த ராஜபக்ச பங்கெடுக்காமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் ஒர் காரணம் : என்கிறது இன் சைட் கேம்ஸ். 
game-140514-150

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கான காரணங்களில் ஒன்றாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் அமைந்துள்ளதென இன்சைட்கேம்ஸ் (.insidethegames)எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக்காட்டியே இச்செய்தியினை அவ்வூடகம் வெளியிட்டுள்ளது.
மக்களாட்சி,சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலானஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப்பு எனும் பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக சிறிலங்கா அரசு இயங்கிவருவதோடு அனைத்துலகத்தின் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் அழுத்தங்களுக்கும் சிறிலங்கா முகம்கொடுத்து வருகின்றது.
சிறிலங்காவின் முப்படைகளுக்கும் தலைமை அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்ற சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த இராஜபக்ச தலைமையிலான படையினர் இலங்கதை;தீவின் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான இனஅழிப்பினையும் நிலஅபகரிப்பும் மேற்கொண்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டபட்டதாக இன்சைட்கேம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குடிசார் உரிமைகள் அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தம் மூலமும்(ICCPR),சித்திரவதை மற்றும் கொடுமைகள்,மனிதாபிமான மற்றதும் தரக் குறைவானதுமான நடைமுறைகள் என்பவற்றிற்கு எதிரான உடன்படிக்கை(ICCPR) மூலமும் பொதுநலவாய அமைப்பானது முறையே 1976, 1987  ஆகிய இரு ஆண்டுகளிலும் மனிதஉரிமை விழுமியங்களைப் பாதுகாப்பதற்குஉறுதியளித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதஉரிமைமீறல்கள், இன அழிப்பு என்பவற்றினால் அந்த நாடானது பொதுநலவாய அமைப்பின் உள்ளுணர்வையே மீறுகின்றது என்ற நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

 

More from our blog

See all posts