தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள் – பிரதமர்

  • October 8, 2013
  • TGTE
தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த  தேர்தலில் பங்கெடுங்கள் !  உரிமையோடு அழைக்கின்றேன் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்
இந்துசமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும்,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார்.

video 1 : http://youtu.be/BSC6GyY8h58

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றன.தற்போது வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தந்தம் நாடுகளில் தாக்கல் செய்து வரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்த அறைகூவலை விடுத்துள்ளதோடு தமிழீழத் தனியரசு என்ற கோட்பாட்டினை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உயிர்புடன் பேணிவருவதாக குறித்துரைத்துள்ளார்.
நாதம் ஊடகசேவை
3 attachments — Download all attachments   View all images   Share all images

More from our blog

See all posts