மாவீர்களை நினைவேந்திர மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான நவ25ம் நாளன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்பாக கூடவுள்ளதாக அரசவைத் நிர்வாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவீரர்களை நினைவேந்தி நவம்பர் 25-26-27 ஆகிய மூன்று நாட்கள் மாவீரர் வாரமாக தமிழீழத் தாயகத்தில் அன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 25ம் திகதி மாவீரர் வாரத்தினை முறையாக மரியாதை வணக்கத்துடன் தொடங்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூட்டுகின்றது.
அரசவையில் வழமைபோல் இடம்பெறுகின்ற விவாதங்களோ கருத்துப்பரிமாற்றங்களோ அல்லமால் சிறப்பாக மாவீரர்பiனி நினைவேந்தி கருத்துரைகள் இடம்பெறுமென அரசவைத் தலைவர் தவேந்திரராஜா தெரிவித்துள்ளார்.