2011-08-10 சிறிலங்காவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம் !

  • September 9, 2013
  • WCE

சிறிலங்காவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம் ! இந்தியாவின் மகளிர் உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் தெரிவிப்பு

 Wednesday, 10 August 2011 at 21:52

சிறிலங்காவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம் ! இந்தியாவின் மகளிர் உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் தெரிவிப்பு

 

சிறிலங்கா அரசின் வெற்று வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம். சிறிலங்கா அரசு, சமாதானத்தையும், மறுவாழ்வையும் பாதிக்கப்பட்ட மகளிருக்கு வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென, இந்தியாவின் மகளின் உரமைகளுக்கான 35 செயற்பாட்டாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


 

 

இந்திய அரசின் மௌனத்தையும், சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களில் இந்திய அரசின் பங்களிப்பையும் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் தமிழர்களின் வாழ்விடங்களில், இந்திய அரசு நிறுவுகின்ற பாரிய உற்பத்தி மையங்கள் நிறுவப்படுவதையும் வன்மையாக கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையில், மகளிருக்கெதிரான அடக்குமுறைகளை அகற்றுவதற்கான கூட்டமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான பெருமளவிலான ஆதாரங்களை தாங்கள் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது :

 

1. போரினால் இடம்பெயர்ந்த பெண்கள் தமது வாழ்விடங்களில் வாழ உடனடியாக வழி செய்யப்பட வேண்டும்.

 

2. உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு பெண்களும் குடும்பங்களும் வீடு திரும்ப வழி செய்யப்பட வேண்டும்.

 

3. மக்களின் வாழ்விடங்களில் இந்திய அரசின் திட்டமிட்ட பாரிய உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

 

4. நாட்டை இராணுவ மயமாக்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 

5. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உடனடியாக முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

 

ஆகிய பல்வேறுவிடங்களை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைத்த நா.த.அரசாங்கத்தின் சிறுவர்-மகளிர்-முதியோர் விவகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள், புதுடெல்லி, மும்பாய், மகாரிஷ்ரா என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற மகளிர் உரிமைவாதிகளின் இக்கூட்டறிக்கையாக அமைந்திருக்கின்றது.

 

இது, தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் அடக்குமுறை குறித்தான விழிப்புணர்வு, தமிழக உணர்வாளர்களையும் தாண்டி, இந்தியாவின் பல்வேறுபட்டவர்களின் கவனத்தைப் பெற்றவருகின்றமைக்கு இந்த அறிக்கை சாட்சியாக உள்ளதென தெரிவித்தார்

.

அத்தோடு, இந்த அறிக்கைக்கு நன்றியினையும,; ஊக்கத்தையும், உறுதுணையையும் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் – முதியோர் – சிறுவர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்தார்.

 

இந்தியாவின் மகளிர் உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒப்பமிட்டுள்ள மகளிர் உரிமையாளர்கள் :

Dr. Uma Chakravarty, Historian, New Delhi – Dr. Ilina Sen, Professor, Wardha, Maharashtra / Dr. Rohini Hensman, Mumbai / Geetha.V, Chennai – Madhu Mehra, Partners for Law in Development, Delhi / Ammu Abraham, Mumbai – Saheli, Delhi / Forum Against Oppression of Women, Mumbai / Lesbians and Bisexuals in Action, Mumbai / Jeny Dolly, Chennai / Karuna, Chennai / Kabi Sherman, Mumbai / Pramada Menon, Delhi / Kamayani Bali Mahabal, Advocate, Mumbai / Shipra Nigam, Delhi / Amrita Shodan, London – Saumya Uma, Women’s Research and Action Group, Mumbai / Vimochana, Bangalore / Dr. Mary. E. JOhn, Director, Centre for Women’s Development Studies, Delhi / Meena Saraswati Seshu, Sangli, Maharashtra / Kaveri Indira, Bangalore / Programme on Women’s Economic Social and Cultural Rights, PWESCR, New Delhi – Lakshmi Lingam, Professor, Women’s Studies, Mumbai / Sonal Shukla, Mumbai / Dr. Leena Ganesh, Mumbai / Laxmi Murthy, Consulting Editor, Himal Southasian / Jayashree Subramanian, Eklavya, Madhya Pradesh / Ponni Arasu, Researcher, Chennai. / Paromita Vohra, Filmmaker, Mumbai. / Anusha Hariharan, New Delhi. / Dr. Kochurani Abraham, Dept. of Christian Studies, University of Madras / Ms. Virginia Saldanha -Satyashodak – Mumbai / Urvashi Butalia, Zubaan, New Delhi / Geeta Charusivam, Social Activist, Chennai / Mangai, Theatre person, Tamilnadu

நாதம் ஊடகசேவை

More from our blog

See all posts