சிறிலங்கா அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிற்கு நீதி கோரி இன்று வரை தொடர்கின்றது நீதிக்கான பயணம் !

  • July 27, 2017
  • TGTE

1983ம் ஆண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு வணக்க நிகழ்வும் இனவழிப்பினை உலகிற்கு எடுத்துக்கூறி நீதி கேட்போம் என்றும் கருப்பொருளில் கண்காட்சியும் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

பிரித்தானியாவில் இலக்கம் 10 ல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு பிற நாட்டு மக்களை கவரும் வகையில் எழுசிசியுடன் முன்னெடுக்கப்பட்டது.

தமிழரின் வரலாற்றினை திருப்பி போட்ட இந்த மிகத்துயர் மிக்க நாளினிலே நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மதிப்பிற்குரிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் நினைவுப் பேருரையின் அறிக்கையினை மதிப்பிற்குரிய இளையோர் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அகிலன் அவர்களால் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கவிதைகள், பாடல்கள், நினைவு சுமந்த உரை என்பன இடம்பெற்றது. இறுதியாக பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

More from our blog

See all posts