எங்கே எங்கள் உறவுகள் ! அனைத்துலகமே நீதி சொல் !! – ஆறு நாடுகளில் அணிதிரண்ட தமிழர்கள் !!

  • September 2, 2019
  • TGTE

இலங்கைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி வேண்டி, அனைத்துலகத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஆறு நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போரட்டத்துக்கு சமந்திராக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்றேலியா மற்றும் தமிழகம் என ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

UK
UK
UK
USA
USA
CANADA
CANADA
CANADA
INDIA
INDIA
FRANCE
FRANCE
GERMANY
GERMANY
AUSTRALIA
AUSTRALIA

More from our blog

See all posts