TGTE - Homeland தாயகம்
நம் உயிர் காக்க தம் உயிர் தந்தோர் மாதமாகிய கார்த்திகை மாதமே எழுச்சி கொள்ளும் என்பதற்கிணங்க தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்தவர்களின் குடும்ப நலனில் அக்கறை கொண்டு நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் மாவீரர் முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் கீழ் 100 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு பிரித்தானியாவில் ஒரு நிதி சேகரிப்பு நடவடிக்கையும் விருந்துபசாரமும் இடம்பெற்றது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் நகரிலே மதியம் இந்நிகழ்வினை மாவீரர்கள் முன்னாள் போராளிகள் சமூகநலன் பேணும் அமைச்சின் பிரித்தானியாவிற்கான செயலாளர் நிமலன் அவர்களால் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
மேலும் அவர் தெரிவிக்கையில் இதற்கான செலவீனங்களை அனுசரனையாளர்கள் மூலம் பெற்று விட்டதாகவும் ஆகவே இதன் மூலம் பெறப்பட்ட முழுத்தொகையும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
TGTE UK MEDIA
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்