சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் இழந்த சொந்தங்களை நினைவு கூரும் மரங்கள் !

  • April 2, 2017
  • TGTE

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உலகெங்கும் நீதி கோரி எமது செந்தங்களை நினைவு கூரும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று நாட்டுவோம்” என்ற செயற்திட்டத்திற்கு அமைய எல்லா நாடுகளிலும் பயன்தரு மரங்களை நாட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.


இதன் ஓர் அங்கமாக கடந்த 29.03.2017 புதன் கிழமை அன்று பிரித்தானியாவின் South Wales பகுதியில் அமைந்துள்ள Singleton Park, Brynmill Lane, Brynmill, Swansea SA2 0AX எனும் இடத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏராளமான புலம் பெயர் தமிழ் மக்களும் சேர்ந்து மரநடுகையில் ஈடுபட்டனர்.

More from our blog

See all posts