சிறிலங்காவுக்கு எதிராக நா.க.த.அ.பட்டியல்: போர்குற்றம் இனஅழிப்பு புரிந்த தலைவர்கள் !

  • April 4, 2014
  • TGTE

சிறிலங்காவுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பட்டியல் : போர்குற்றம் இனஅழிப்பு புரிந்த அரசியல் தலைவர்கள் இராணுவ தளபதிகள் உள்ளடக்கம் !

இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள் ,  இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுமான மையத்தினால் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட 1373ம் இலக்க பிரேரணையின் தீர்மானத்தின் விதிகளுக்கு புறம்பாக, ஒர் இனத்தின் மீது திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளது.
இச்செயலில் ஈடுபட்பட்ட சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கவுள்ளது.
இதேவேளை அனைத்துலக சட்டங்களுக்கு போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட குறித்த இந்த நபர்களது பெயர்விபரங்களை, அனைத்துலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதோடு, அவர்களது சொத்துக்களை முடக்குவதற்குமாறு கோருவதோடு, பயணத்தடைகளையும் இடுமாறும் அந்நாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோர இருக்கின்றது.

More from our blog

See all posts