திருத்தந்தையே! அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள். எங்கள் இனவிடுதலைக்கு ஆசீர்வதியுங்கள்.
வணக்கத்துக்குரிய தந்தையே! உங்கள் வருகை எங்களுக்கு விடுதலையை பெற்றுத்தரட்டும்.
தமிழினத்தின் அடிமைச்சாசனத்தை திருத்தி எழுதித்தாருங்கள்.
அருள்தந்தையே! ஆக்கிரமிப்புகள், படுகொலைகள், ஆட்கடத்தல்களிலிருந்து எம்மைக்காப்பாற்றுங்கள்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள், உறவுகளை தேடியலைகிறோம். எங்களுக்கு ஆறுதல் தாருங்கள்.
இறுதிப்போரில் சரணடைந்த எங்கள் கணவர்கள், பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள். கேள்வி எழுப்புங்கள்.
வணக்கத்துக்குரிய திருத்தந்தையே! தடுப்புக்காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள். இரந்து கேட்கின்றோம்
அருள்தந்தையே! எங்கள் பிள்ளைகள், உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள்.
எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு பரிகார நீதியை பெற்றுத்தாருங்கள்.
திருத்தந்தையே! அடிமைத்தமிழ் மக்களுக்கு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலை பெற்றுத்தாருங்கள்.உங்கள் பாதம் பதிந்த ஈழமண் விடிவு காண வேண்டும். பொதுசன வாக்கெடுப்புக்கு பரிந்துரை செய்யுங்கள்.