TGTE - Homeland தாயகம்
தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பொங்கலிடல், கருத்தரங்குகள், நிகழ்வரங்குகள் என பல்வேறு வகையிலும் தமிழர் மரப்பினையும் பண்பாட்டினையும் வெளிப்படுத்தவும் கொணடாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனொரு அங்கமாக பிரித்தானியாவின் குறொய்டன் பகுதியில் தமிழர் திருநாள் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
சனவரி 16ம் நாள் சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை குறித்த
The Archbishop Landfrac Acadamy,
இவ்விடத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அனைவரையும் பங்கெடுத்து தமிழர் திருநாளை ஒருத்துவமாக கொண்டாட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.