ஈழத்தமிழர் விவகாரத்தில் ஓர் அரங்கில் ஒலித்த தமிழகத் தலைவர்களின் குரல்கள் !!

ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக தலைவர்களின் குரல்கள் வேறுபாடின்றி ஒலித்த அரங்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் அமைந்தமைக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆளும் அ.தி.மு.கத் தலைவர்களும், எதிர்கட்சி தி.மு.க தலைவர்களும் கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.

மே 19ம் நாளன்று தொடங்கிய நா.தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவைக் கூட்டம் 21ம் நாள் வரை அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது.

இக்கூட்டத் தொடருக்கு தமது வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தமிழர் தாயகத்தில் இருந்து தலைவர்கள் பலர் வழங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு தலைவர்களின் குரல்கள் வேறுபாடின்றி ஒலித்த அரங்காக இது அமைந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.கவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,பாண்டிருட்டி இராமசந்திரன், பொன்னையன் ஆகியோர் கருத்துக்களை வழங்கியுள்ளனர்.

எதிர்கட்சித் தலைவரும், தி.மு.கவின் செயற்தலைவருமாகிய ஸ்டாலின் அவர்கள் வாழத்தினை தெரிவித்துள்ளார்.
வேல்முருகன்(தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), பொல் கனகராஜ்
(தமிழ் மாநிலக் கட்சி), இரா.முத்தரசன் (இந்திய கொம்யுனிஸ்ற் கட்சி – தமிழ்நாடு), செந்தில் (இளந்தமிழகம்) மற்றும் தமிழின உணர்வாளர் சத்யராஜ் அவர்களும் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

வேறுபாடுகளன்றி ஒலித்த தமிழகத்தலைவர்களது இக்குரல்கள், காணொளிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வில் ஒளித்திருந்ததோடு, மடல்கள் வாசிக்கப்பட்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

 

 

 

 

 

 

More from our blog

See all posts