வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் அரசியல் சாசனம்  வரையப்பட்ட  National Constitution Centre  வரலாற்றுக் கூடத்தில் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது.இதில் பிரதமருக்கான பொறுப்புக்கு இருவரது பெயர்கள், மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட நிலையில் பெரும்பான்மை வாக்குகளால் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.போராட்டத்தில் பதவிகள் வழங்கப்படுவதல்ல. பொறுப்புக்களே வழங்கப்படுகின்றன. பதவிகள் யாவும் இங்கு வேசங்களே. நாம் அனைவரும் விடுதலைக்கான களத்தில் போராளிகளே என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராடத்தினை உறுதியுடன் அவர் முன்னெடுக்க உலகத் தமிழர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது வெளியீடு :
நாதம் ஊடக சேவை
ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

More from our blog

See all posts