சர்வதேச பிரநிதிகளின் பங்கெடுப்புடன் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை !

கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorian  ஆகியோரது சிறப்புரைகளுடன் அரசவை அமர்வு சிறப்புடன் இடம்பெற்றது.

தற்போது கொரோனா வைரஸ் பெருற்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை மேற்கொள்ள முடியாத நிலையில், இணையவழி அரசவை அமர்வாககடந்த டிசெம்பர் 5ம்,6ம் ஆகிய இருநாட்கள் இடம்பெற்றிருந்தது.மாதம் தோறும் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக கூடுகின்ற அரசவையானது, வருடத்தில் இரு தடவைகள் நேரடி அரசவை அமர்வுகளை கொண்டதாகவுள்ளது.

தொடக்க நாள் நிகழ்வினை துணை அவைத்தலைவர் ரஜினிதேவி செல்லத்துரை அவர்கள் நடத்தியிருக்க, துணைப் பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வரவேற்புரையினை வழங்கியிருந்தார். தொடர்ந்து தமிழர் அமைப்பு பிரதிநிதிகளின் வாழ்த்துரைகள், கருத்துரைகள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து அரசவைக் கூட்டத்தினை அவைத்தலைவர் கலாநிதி சர்வேஸ்வரிதேவி அவர்கள் நடத்தியிருந்தார். அரசவை, மேற்சபை உறுப்பினர்களது அறிமுகவுரைகளுடன் ஒத்திவைக்கப்பட்ட சபையில் ‘இந்தியப் பெருங்கடல் புவிசார் இராஜதந்திர அரசியலில் தமிழர்கள் ஓர் தரப்பாக’ எனும் தொனிப்பொருளில், பேராசிரியர் இராமு.மணிவண்ணன், கலாநிதி அருண்குமார் அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துரைகளை அடிப்படையாக கொண்டு மேற்சபை உறுப்பினர்கள், அரசவை உறுப்பினர்கள் பங்கெடுத்த கருத்தாடல் இடம்பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் அமர்வில் அமைச்சரவை அறிக்கைகள் அவையில் சமர்பிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனத்தில் தாய்வானுக்கு பார்வையாளர் அந்தஸ்த்து தகுதி நிலைக்கு தோழமை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை நாகோர்னோ, கரபாக் பிராந்தியங்களில் ஆர்மேனியவர்கள் மீதான அஜர்பைஜானின் தாக்குதலை கண்டிக்கும் தீர்மானம் அவையில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கேள்வி நேரம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்து வந்த பாதை, முன்னேற்றங்களுக்கான செயல்வழிப்பாதை, கருத்துரைகள் இடம்பெற்றிருந்தன.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது நிறைவுரையுடன் அரசவை சிறப்புடன் நிறைவுகண்டது.

More from our blog

See all posts