TGTE - Homeland தாயகம்
தமிழர்திருநாள் வாழ்த்துகளை உலகத் தமிழ் உறவுகளுக்கு தெரிவித்துள்ள பிரதமர்வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக்காலத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பினை உத்தியோகபூர்வமா அறிவித்துள்ளார்.
பிரதமர்அலுவலகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலர், அமைச்சரவை, துறைசார் நிறுவனங்கள் என பல்வேறு நிர்வாக கட்டமைப்புக்கள்அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக்கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின்உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக்கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத்தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின்ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என பிரதமர்வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார்.
அறிக்கையின் முழுவிபரம் :
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொங்கல்திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருநிறைவடைகிறேன்.
தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் தமது வாழ்வைப்புதுப்பித்துக்கொள்ளும் காலமாக அமையும் தைத்திருநாளில், நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக் காலத்தின் நிர்வாகக் கட்டமைப்பை, மக்களுக்கு வெளிப்படுத்துவதில் நான் மகிழ்வடைகிறேன்.
இப்புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக்கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின்உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக்கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத்தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின்ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனையும்தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக்காலம் ஐந்து வருடங்களைக் கொண்டதாகஅமைகிறது. எமது அரசியலமைப்பு விதிகளின்படி இதுவே நான் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பிரதமராகப் பணியாற்றும் இறுதித் தவணையாகவும் இருக்கும்.ஏதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமானகாலகட்டமாக அமையவுள்ளன. தமிழீழ அரசு என்ற குழந்தை பிரசவிப்பதற்கானவாய்ப்புக்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் இக்காலம் இருக்கிறது.
இத்தகையதொருசூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மிகுந்த செயல்முனைப்பு கொண்டஅமைப்பாக நாம் வளர்த்தெடுப்பது மிகவும் அவசியமானதாக அமைகிறது.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பை வீச்சாக்குவதற்கு, நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் அப்பால் சென்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கமாக நீடித்து நிலைக்கக்கூடிய பல்வேறுபுதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டியதும் இன்று அவசியமாக உள்ளது.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களாக இல்லாத பல்வேறு துறைசார்நிபுணர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்புகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இன்று உள்ளது. நாடு கடந்த தமிழீழஅரசாங்கத்தின் சிறப்பான செயற்பாட்டை வழிநடாத்த பிரதமர் பணிமனையினைப்பலப்படுத்தி விரிவுபடுத்துவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம்கவனத்திற் கொண்டுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்கானகட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.
எனவேஇத்தவணையின்போது நாடுகடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையினை எண்ணிக்கையில்குறைத்துக்கொண்டு, கடந்த தவணையின்போது அமைச்சுக்களாக இருந்த சில துறைகளைத்துறைசார் நிறுவனங்களாக மாற்றியமைப்பது எனவும் நான் முடிவுசெய்திருக்கிறேன்.
பிரதமர்பணிமனையினை வலுப்படுத்தவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பிரதமர்செயலகப்பணிமனை நிர்வாகத்தின் பொறுப்புள்ளவராக ஒரு தலைமைச் செயலரை (Chief Executive Secretary) நியமிப்பது என முடிவு செய்திருக்கிறேன். அத்தலைமைச்செயலர் எனது சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாகவிடயங்களுக்குப் பொறுப்பாக இயங்குவார். அதேபோல நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் நாடுகள்தழுவியரீதியில் வளர்த்தெடுக்கப் பிரதமர் பணிமனைப் பிரதிநிதிகள் பலரைநாடுகள் மட்டத்தில் நியமிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் புதிய துறைசார் நிறுவனங்கள் செயற்பாட்டளவில்அமைச்சுகளுக்கு இணையான வகையில் இயங்கும். இந்நிறுவனங்கள் பிரதமர்பணிமனையால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் இந்நிறுவனங்களின் செவ்வையானசெயற்பாட்டுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பிரதமர் பணி;மனை வழங்கிக்கொள்ளும்.
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும்வடிவடைப்பதற்குத் துணைசெய்யும் முகமாக, கொள்கை வடிவவமைப்புக் குழுக்களையும்பிரதமர் பணிமiனியின் கீழ் உருவாக்கியுள்ளோம்.
தற்போதுஅறிவிக்கப்பட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாகக்கட்டமைப்பு தேவையேற்படும் போது, மேலும் விரிவு செய்யப்படும் என்பதனையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தனித்தனிச்செயற்திட்டங்கள் (Projects) குறித்த விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத்தரப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதுள்ளஅமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் துணையாக, அரசவை உறுப்பினர்களைக்கொண்ட குழுக்களும் உருவாக்கப்படும். புதிய அரசவையில் அங்கம் வகிக்கும்அத்தனை உறுப்பினர்களும் அமைச்சர்-உறுப்பினர் என்ற வேறுபாடின்றி ஏதோ ஒருசெயற்திட்டத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு உற்சாகத்தோடு உழைப்பதற்குத்தம்மைத் தயார்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்போதுகட்டமைத்திருக்கும் நிர்வாகக் கட்டமைப்பினை வருடம் தோறும் மீளாய்வு செய்துஅதற்கமைய தேவையான மாற்றங்களை மேற்கோண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்செயற்பாடுகளை செயல்வலுவுடன் முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுச் செயலகக்கட்டமைப்பு விபரங்கள் :
பிரதமர்: திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்
தலைமைச்செயலர்: பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா
துணைப் பிரதமர்: திரு கனகரட்ணம் மனோரஞ்சன்
அமைச்சுகள்:
துறைசார் நிறுவனங்கள் :
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.