TGTE - Homeland தாயகம்
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது அகவை காணும் நாளான 26-11-2014 இன்று வடமேற்கு லண்டன் மக்கள் தலைவரின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.
குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்டப வாசலில் நிறைகுடமும், தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது.
அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த நிகழ்வில் வருகை தந்திருந்த மிகச்சிறியவர்களான இரு சிறுவர்கள் சதுப்பியை (கேக்) வெட்டி வயதில் முதியவரான ஒரு அம்மாவிற்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து இளையோர் உட்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மக்கள் பிரதிநிதிகள் பலரும் தேசியத் தலைவனை வாழ்த்தியும், தொடர்ந்து தமிழீழ விடுதலை நோக்கி தலைவனின் வழியில் பயனிக்கவேண்டியது தொடர்பாகவும் உரையாற்றினர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேக், இனிப்புவகை என பலவற்றை வழங்கியதோடு, வான வேடிக்கையையும் நடாத்தி மகிழ்ந்தனர்.