TGTE - Homeland தாயகம்
அனைத்துலக பெண்கள் நாள் : தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மார்ச்-8 அனைத்துலக பெண்கள் நாளினை மையப்படுத்தி பிரித்தானியாவின் புகழ்பெற்ற பெண்கள் பேரிணில் தமிழீழத் தாயக பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க அணிதிரளுமாறு பிரத்தானிய வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 09-03-2013 சனிக்கிழமை மதியம் மணிக்கு Oxford Street (Outside Selfridges) எனும் இடத்தில் அணிதிரண்டு பின்னர் பேரணியாக இடம்பெறும் இந்நிகழ்வில் பல்லினப் பெண்கள் – அமைப்புக்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
தமிழ்பெண்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசினது அடக்குமுறையும் பாலியல் அத்துமீறல்களும் நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பின் ஓர் வடிவமாகவே இருக்கின்றதெனவும் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாதம் ஊடகசேவை
video HRW : http://youtu.be/geSugt_hiQg