நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த கருத்தரங்கும் இராப்போசன ஒன்றுகூடலும் எதிர்வரும் ஏப்ரல் 26ம் நாளன்று இடம்பெறவுள்ளது.
ஒரு நாளில் இரு நிகழ்வாக இருவேறு அரங்குகளில் கருத்தரங்கும் இராப்போசன ஒன்றுகூடலும் இடம்பெறுகின்றது.
கனேடிய அரசியல் தலைவர்கள் உட்டப பல்வேறு நாடுகளிலும் இருந்து பேராளர்கள் பலர் பங்கெடுக்கின்ற கருத்தரங்கானது ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கான பரிகாரம் தேடும் வழிமுறைகள் எனும் தொனிப்பொருளில் அனைத்துலக மட்டத்தில் நீதிகோரி தமிழர்கள் முன்னெடுக்கும் முனைப்புக்கள் என இடம்பெறுகின்றது.