அனைத்துலக செயல்வீரர்கள் பங்கெடுக்கும் சிறிலங்கா புறக்கணிப்பு லண்டன் மாநாடு !

say-no-to-sri-lanka_MAY17(1)புறக்கணிப்பு போராட்ட அனைத்துலக செயல்வீரர்கள் பங்கெடுக்கும் சிறிலங்கா புறக்கணிப்பு லண்டன் மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்உலகின் பல்வேறு புறக்கணிப்பு போராட்டங்களில் முதன்பெற்ற செயல்வீரர்கள் பலர் சிறிலங்காவுக்கு எதிராக கூட்டிணையும் சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு, லண்டனில் இடம்பெறுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.இதுதொடர்பில் சிறிலங்கா அரசு தனது கடுமையான விசனத்தினை வெளிப்படுத்தி வரும் நிலையில், இம்மாநாடு குறித்தான இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.’சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோபாயங்களைக் கண்டறிவதற்காகவும் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

சிறிலங்காவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டில் கிரிக்கெட் புறக்கணிப்பு செயல்வீரர் Trevor Grant, பலஸ்தீனத்தினை மையப்படுத்திய இஸ்றேல் புறக்கணிப்பு BDS அமைப்பின் பிரதிநிதி Omar Barghouti, தென்ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் பிரதிநிதிகள் Krish Govender, Roy Chetty, முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற பிரித்தானிய உறுப்பினர் Robert Evans உட்பட பல்வேறு அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுக்கின்றனர்.

எதிர்வரும் மே 17ம் நாள் சனிக்கிழமை மத்திய லண்டனில் இடம்பெறவிருக்கின்ற இந்த மாநாட்டில் பங்குகொள்ள விரும்புவோர், குறித்த saynotosrilankaconference@gmail.com இந்த மின்னஞ்சல் ஊட தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Trevor Grant: Talk about Cricket Boycott
Omar Barghouti: BDS Member(Address via Skype)
Krish Govender: ANC Member South Africa
Roy Chetty: ANC Member South Africa
Robert Evans: Former Member of European Parliament

say-no-to-sri-lanka_MAY17(1)

More from our blog

See all posts