ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்திருந்த வேளையிலேயே இக்கையெழுத்து போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் இந்த முன்னெடுப்புக்கு நல்ல பலன் இதற்கு கிடைக்கும் என கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வட மாகாண சபைப்பிரதிநிதி அனந்தி சசிதரன் அவர்கள், மக்கள் மிகவும் ஆர்வமாகவும் தங்களுடன் நிலைப்பாட்டில் மாற்றமின்றியும் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர்களுடைய இராஜதந்திரச் செயற்பாட்டுக்கு வலுவூட்டும் வகையில் இக்கையெழுத்துப் போராட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என வட மாகாண சபையின் மற்றுமொரு பிரதிநிதியான சிவாஜிலங்கம் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் சர்வதேசத்தின் மன்சாட்சியினை தட்டியெழுப்புகின்ற வகையிலேயே கையெழுத்து இயக்கம் வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்கையெழுத்து போராட்டத்தில் மக்கள் நேரடியாகவும் மற்றும் குறித்த

www.tgte-icc.org   

இந்த இணையமூலமாகவும் ஒப்பமிட்டுக் கொள்ள முடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.


TGTE21