கெய்டி நாடுவரை வரை நீண்ட சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை !

  • April 2, 2015
  • TGTE
மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கெய்டியில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை தீவிரமாக இடம்பெற்று வருவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நா வகை கோரும் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கம் சமீபத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கி வைத்திருந்தது.

இதன் ஒரு அங்கமாக கெய்டியில் பிரான்சினை தளமாக கொண்டு இயங்கும் CNRJ அமைப்பின் உறுதுணையுடன் கெய்டியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா அமைதிப்படையில் இணைந்திருந்த சிறிலங்கா சிப்பாய்கள், கெய்டியில் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருந்த விடயம் அங்கு கொந்தளிப்பிiனை ஏற்படுத்தியிருந்ததோடு விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை தீவிரமாக அங்கு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம்.

சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய அதிபர் சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

haiti-250x150

More from our blog

See all posts