அமெரிக்காவில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் : பிரதமர் பங்கெடுப்பு

Rudra-Protestமுள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை புலம்பெயர் தமிழர்கள் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்தி வரும் நிலையில், அமெரிக்காவின் பல பாகங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனொரு அங்கமாக நியூ யோர்க்கில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் பிறதொரு பகுதியான நியூ இங்கிலாந்து மாநிலத்தில் வாழுகின்ற தமிழர்கள் அப்பகுதி Amensty International ஒத்துழைப்போடு, ஆகிய USTPAC, Boston Thamil Assoctation அமைப்புக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகளும் கூட்டாக தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்தியுள்ளனர்.

More from our blog

See all posts